பாடநூல்களில் தொடரும் குழப்பங்கள்

பாடநூல்களில் தொடரும் குழப்பங்கள் மு.சிவகுருநாதன்        சில நாள்களுக்கு முன்புஎனது மகள் கவிநிலாவின் ஆறாம் வகுப்பு இணையவழிக் கல்வியை கொஞ்சம் செவிமெடுத்தேன். ஆங்கிலப்பாடம். ஆங்கிலவழியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களைத் தமிழில் சொல்லிக் கொடுப்பதைப் போலவே  ஆங்கிலத்தையும் தமிழிலேயே சொல்லித்தரும் சிறப்பைப் பெற்றிருக்கிறோம்.     “நாம் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு அசுத்தமான கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். மரங்கள் அசுத்தமான கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன”, என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். இந்த“பாடநூல்களில் தொடரும் குழப்பங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

யாருடைய கட்டுப்பாட்டில் மெட்ரிக். பள்ளிகள்?

யாருடைய கட்டுப்பாட்டில் மெட்ரிக். பள்ளிகள்? மு.சிவகுருநாதன்        பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் (2021-2022) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குறித்து கீழ்க்கண்ட வரிகள் இடம்பெறுகின்றன.     “மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தமிழ்நாடு பொதுக்கல்வி வாரியப் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டத்தினைப் பின்பற்றிக் கல்வி கற்பிக்கும் தனியார் சுயநிதிப் பள்ளிகளாகும்.” (பக்.44)  மேலும் இதில் 5 குறிக்கோள்களும் இடம்பெறுகின்றன. அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம், குழந்தைகள் பாதுகாப்பு, தகுதியான ஆசிரியர்கள் நியமனம், கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 அமலாக்கம், சட்டங்கள், விதிகள்,“யாருடைய கட்டுப்பாட்டில் மெட்ரிக். பள்ளிகள்?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்ன நடக்கிறது தமிழகக் கல்வித்துறையில்…?

என்ன நடக்கிறது  தமிழகக் கல்வித்துறையில்…? மு.சிவகுருநாதன்      புதிய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கென தனித்த கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இக்கோரிக்கை பன்னெடுங்காலமாக தமிழ்ச் சூழலில் முன்வைக்கக்கூடிய ஒன்று. கல்வி மாநிலப் பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டப் பிறகு இது எந்தளவிற்கு சாத்தியம் என்பதும் கேள்விக்குரியது. அப்படியே கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டாலும் அதற்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் தேவை. இது எளிதில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. மிக நீண்ட ஜனநாயக மற்றும் சட்டப்போராட்டங்களை“என்ன நடக்கிறது தமிழகக் கல்வித்துறையில்…?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு கல்வித் தொலைக்காட்சி அனுபவம்!

ஒரு கல்வித் தொலைக்காட்சி அனுபவம்! மு.சிவகுருநாதன் எங்களது இளைய மகள் கயல்நிலா இவ்வாண்டு முதல் வகுப்பு படிக்கிறார். கல்வித் தொலைக்காட்சியில் முதல் வகுப்பு பாடம் ஒளிபரப்பு நேரம் மதியம் 01:00 – 01:30 இந்த நேரத்தை முதல் வகுப்பிற்கு ஒதுக்கீடு செய்த அறிஞர்களை என்ன செய்வது? ( லஞ்ச் டையத்திலா என்று முன்பு கடுமையான டோஸ் விட்டிருந்தார்.) இன்று… “பாத்ததையே திரும்பத் திரும்ப போடுறாங்க. நான் கடுப்பாயிட்டேன். புத்தகத்தை முடிச்சுட்டேன். இனி டிராயிங் கிளாஸ் மட்டும் பாக்குறேன்”,“ஒரு கல்வித் தொலைக்காட்சி அனுபவம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்க்கிறதா?

ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்க்கிறதா? மு.சிவகுருநாதன் காட்சி: 01 முந்தைய அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டது. திமுக அரசு பதவியேற்றவுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு அப்பதவி ஆணையரின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. காட்சி: 02 சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற ஆர்.வேல்ராஜ் பொறியியல் பாடத்திட்டம் 20% மாணவர்களுக்கு மட்டும் புரிகிறது. 80% மாணவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை. எனவே இவர்களுக்கு தனித்தனி பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்றார். மேலும்“ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்க்கிறதா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்று மாறும் இந்நிலை?

என்று மாறும் இந்நிலை? மு.சிவகுருநாதன்            ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி என்பது புதிதல்ல. ஏற்கனவே  இவை இரண்டு நாள்கள் நடத்தப்பட்டன. தற்போது EMISக்கு முதன்மை தந்து ஆன்லைனில் 5 நாள்கள்  நடத்தப்படுகிறது.         கல்வித் துறையில் சாதிமுறைக்கு இணையான படிநிலை அமைப்பு  (Hierarchy) செயல்படுவது மிக மோசமானது. முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என்பதாக இந்த கல்வி வருணமுறை உள்ளது.       இவர்களை ஒன்றாக“என்று மாறும் இந்நிலை?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இட ஒதுக்கீட்டின் அறம்

இட ஒதுக்கீட்டின் அறம் மு.சிவகுருநாதன்        இந்திய அரசியல் சட்டம் அனைவருக்குமான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்க உறுதியேற்கிறது. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதை ஏற்கிறது. அதனடிப்படையிலேயே இங்கு இட ஒதுக்கீடு அமலாகிறது.       சமத்துவத்தை நோக்கியப் பாதையில் பல்வேறு அசமத்துவங்களை இந்தச் சமூகம் எதிர்கொள்கிறது. இவற்றைச் சரிசெய்வதற்காகவே ஒதுக்கீடுகள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள்ளாக அசமத்துவச்“இட ஒதுக்கீட்டின் அறம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.