ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதேயில்லை! மு.சிவகுருநாதன் ஆசிரிய இயக்கங்களின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலித்து 16/10/2021 சனியன்று விடுமுறை அளித்து தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆயுதபூசை, தீபாவளி விடுமுறைகளுக்காக மனுபோடும் நிலையில் ஆசிரிய இயக்கங்கள் இருப்பது மிகவும் பரிதாபகரமானது. எத்தனை சனிக்கிழமை பள்ளி நடத்தினாலும் பொதுமுடக்க இழப்பை ஈடு செய்ய இயலாது. எனவே தற்போது பள்ளிக்கு வருகின்ற 9, 10, +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வார விடுமுறை இரண்டு நாள்கள் அளிப்பதால் ஒன்றும்“ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதேயில்லை!”-ஐ படிப்பதைத் தொடரவும்.
Monthly Archives: ஒக்ரோபர் 2021
நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை
நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை மு.சிவகுருநாதன் பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட மார்க்சிய அறிஞர். இலக்கியம், அரசியல், மார்க்சியம், தலித்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், பின்நவீனத்துவம், அடித்தள ஆய்வுகள், பவுத்தம், இஸ்லாம், மனித உரிமைகள், கல்வி எனப் பல்வேறு களங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். இவரின் நவதாராளவாதம் (Neoliberalization) குறித்த அறிமுகநூல் ஒன்றை எழுத்து பிரசுரம் (ஜீரோ டிகிரி பப்ளிஷிங்) வெளியிட்டுள்ளது. நவதாராளவாதததைக் கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிச்“நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை”-ஐ படிப்பதைத் தொடரவும்.
புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது
புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது: வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஒரு குறிப்பு: தனது வாழ்நாளை மனித உரிமைப்பணிகளுக்காகவும் தலித்களுக்காகவும் அர்ப்பணித்தவர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள். பாதிக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய பல வழக்குகள் மட்டுமே இவரது சொத்துகளாகும். அம்பேத்கரியம், பவுத்தம், மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த பாதையில் 70 வயதைக் கடந்தும் தொடர்ந்து இயங்கி வருகிறார். விருத்தாசலம் கண்ணகி-முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கின் வெற்றியின் பின்னணியில் இருப்பவர் இந்த மனித உரிமைப் போராளி. இவர்“புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது”-ஐ படிப்பதைத் தொடரவும்.