புதிய புரிதலையும் நுணுக்கமான அவதானிப்புகளையும் கொண்ட கட்டுரைகள்


புதிய புரிதலையும் நுணுக்கமான அவதானிப்புகளையும் கொண்ட கட்டுரைகள்

(‘விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்’ நூல் குறித்த அறிமுகம்)

முனைவர் பே.சக்திவேல்

               ‘Sabaltern Studies’ எனப்படும் விளிம்புநிலையினர் பற்றிய நோக்கு, ஆய்வு என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக முக்கியமான அதிர்வுகளை ஏற்படுத்தியது எனில் அது மிகையன்று. சமூகத்தை மேலிருந்து கீழாகப் பார்க்கும்போது மேல்தட்டு, அடித்தட்டு என்றும் வட்டமாகப் பார்க்கும்போது மையம், விளிம்பு என்றும் பார்க்கின்ற பார்வை தமிழ் ஆய்வுலகில் மிக அடிப்படையான ஒன்றாக உள்ளது. அடித்தட்டு, விளிம்புநிலை குறித்த நோக்கே சமகாலச்சூழலில் தேவையானதாகவும் உள்ளது. சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் வர்க்கங்கள், அரசியல் என்பன தொழிற்படுகின்ற நிலையில் அடித்தட்டு மக்கள், விளிம்புநிலை மக்கள் குறித்த அரசியல் பார்வை ஆகியன எத்தகைய அவதானிப்புக்குட்பட்டனவாய் இருந்து வருகிறது என்பதைச் சமகாலச் சூழலில் நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. மு.சிவகுருநாதனின்  ‘விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்’ எனும் நூற்கட்டுரைகள் இவற்றைச் சிறப்பாகப் புலப்படுத்தி நிற்கின்றன.

       சோலை சுந்தரபெருமாள், தேன்மொழி, சிவகுமார் முத்தய்யா ஆகியோரின் நாவல் குறித்த விமரிசனக் கட்டுரைகளும், பிற்காலச் சோழப் பெருமித வரலாற்றெழுதிய நூல்களை மடைமாற்றிய நூல்கள், இந்துத்துவம் கட்டியெழுப்புகிற வரலாற்றுக்கு மாற்றாக அசல் வரலாற்றை எழுதுதல், சுயமரியாதை இயக்கம் இஸ்லாமை மாற்றாகக் கொண்டாடியமை, அவைதீக மரபுகளை அணுகும் பார்வைகள், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மொழிபெயர்ப்பு நூல் என்பன குறித்த கட்டுரைகளுடன் இருபது கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூல் நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது போல வாசகப் பார்வையாக அமைந்திருப்பினும்கூட, விளிம்புநிலை, சாதி, மதம், பொருளாதாரம் எனப் பல்வேறு சமூக அசைவியக்கங்கள் பற்றிய புதிய புரிதலையும் நுணுக்கமான அவதானிப்புகளையும் முன்வைத்துள்ளது. இலக்கியப்பிரதி, வரலாற்றுப் பிரதிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற தெளிவை வாசகர்களுக்குப் புலப்படச் செய்கின்றது.  

நூல் விவரங்கள்:

விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கலையும்

2023 / கட்டுரைகள் 

மு.சிவகுருநாதன்

நன்னூல் பதிப்பகம், மணலி – 610203

விலை ரூ.200

தொடர்புக்கு: 9943624956

நன்றி: பேசும் புதியசக்திஏப்ரல் 2024

Published by பன்மை

நான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.

பின்னூட்டமொன்றை இடுக